Skip to content

தமிழ் தேசிய போராளி முத்துகுமாருக்கு நினைவேந்தல் நிகழ்வுகள்

January 28, 2012

முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்த வருக. வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் உயிர்நீத்த ஆடோசு சாலைக்கு முத்துக்குமார் பெயரைச் சூட்ட வலியுறுத்தவும் மூன்றாம் ஆண்டு வீரவணக்கம் செலுத்தவும் அழைக்கிறது! தமிழர் எழுச்சி இயக்கம் நாள்: 29-01-2012, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி இடம்: முத்துக்குமார் சாலை (ஆடோசு சாலை, சாஸ்திரி பவன் அலுவலகம்) தமிழன் உயிரை மயிராய் மதித்த தமிழின பகைவர்களை எதிர்த்து தமிழர்கள் நெருப்பாய் எழுந்திட, நெருப்பாய் ஆன வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு…

அவர் உயிர்நீத்த சென்னை ஆடோசு சாலையில் உள்ள சாஸ்திரி பவன் அலுவலக நுழைவுவாயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர் எழுச்சி இயக்கத்தினர் வீரவணக்கம் செலுத்தி கைதானது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு வீரவணக்கம் செலுத்தும்போது வீரத் தமிழ்மகன் உயிர்நீத்த ஆடோசு சாலைக்கு முத்துக்குமார் சாலை என்று பெயர் சூட்ட தமிழக அரசை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட வகையில் வருகின்ற 29-01-2012 அன்று காலை 10.30 மணி அளவில், முத்துக்குமார் சாலையில் (ஆடோசு சாலை) எமது இயக்கம் சார்பில் வீரத் தமிழ்மகனுக்கு மூன்றாம் ஆண்டு வீரவணக்கம் செலுத்த உள்ளோம். இந்த வீரவணக்க நாளில் பங்கேற்க விரும்புவோர் கீழ்க்கண்ட அலைபேசி அல்லது மின்னஞ்சல் வழி தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ப.வேலுமணி ஒருங்கிணைப்பாளர் – தமிழர் எழுச்சி இயக்கம்
அலைபேசி: 9710854760
மின்னஞ்சல்: thamizharezhuchi@gmail.com

Somu Data

—————————————————————————–

முத்துக்குமாருக்கு வீர வணக்கம் செலுத்துவிதமாக சென்னை கொளத்தூர் பெரவல்லூரில் நெடுமாறன், வைகோ கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் மாலை 6 மணியளவில் நடைபெறும்.. வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்துகொள்ளுங்கள்..

பாலாவின் இணையம்

—————————————————————————–

வீர திருமகன் முத்துக்குமார் நினைவு நாளில் அனைவரும் கூட்டம் போட்டு தன் இன உணர்வுகளை வெளிகாட்டுகிற நேரத்தில் அவர் உயிர் நீத்த சாஸ்த்ரி பவன் இருக்கும் இடமான ஹாட்டௌஸ் சாலைக்கு முத்துகுமரனின் பெயரை சூட்ட சொல்லி ஹட்டௌஸ் சாலையில் மறியல் செய்து கைதாகி அரசிடம் தொடர்ந்து 3 ஆண்டாக வேண்டுகோள் வைக்க அழைக்கிறோம்!! இந்த செயலை கூட்டம் போடுகிற அனைத்து இனமான தோழர்களும் ஒருங்கே சொல்வதின் மூலம் அரசின் கேட்காத காதுகளுக்கு புரிய வைப்போம்!!

அமைப்பு கடந்து, சாதி கடந்து, மதம் துறந்து, கட்சி மறந்து தமிழனாக மனிதனாக அந்த தியாக செம்மலின் பெயரை அந்த சாலைக்கு பெயராய் வைக்க போராடுவோம்!! தொடர்ந்து இதற்காக போராடி வரும் வரும் தமிழர் எழுச்சி இயக்கத்தின் தோழர்களை பாராட்டுவோம்!! தயவு கூர்ந்து ஒற்றுமையாய் இந்த செயலை செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை நோக்கி ஒத்த கருத்தில் இணைவோம்!! போராட்ட களத்திற்கு வர தயாராய் இருப்போர் தொடர்பு கொள்ள : 9710854760

Thamizh Selvan

—————————————————————————–

அண்ணன் தமிழ் தேசிய போராளி முத்துகுமாருக்கு நினைவேந்தல், தோழர்கள் அனைவரும் ஒன்றுகூட வேண்டுகிறோம்!!!

Muthukumar - Jan 29

தமிழ் தேசியப்போராளி சுபா.முத்துக்குமார் அண்ணனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் வருகின்ற பிப்ரவரி 15ம் நாள் புதுக்கோட்டையில் நடைபெற இருக்கிறது. அண்ணனின் தியாகங்களை நினைவுகூர்ந்து வணங்குவோம். வாருங்கள் தோழர்களே!

Lakshmi Narayanan

—————————————————————————–

Muthukumar

மாவீரன் முத்துக்குமாரின் நினைவு நாள்

தமிழர் நட்பு கழகம் –

மும்பை நடத்தும் மாவீரன் முதுக்குமாரின் நினைவு நாள் கூட்டம், மும்பை சீத்த கேம்ப் யில் 29/01/1012 மாலை 6.30 மணிக்கு, D – செக்டர் யில் நடைபெறயுள்ளது.

தமிழர் நட்பு கழக நிறுவன தலைவர் மா.கதிரவன் தலைமை தங்குகிறார் ..

இதில் இன உணர்வாளர்கள் பெருவரியாக கலந்து கொள்ள உள்ளனர் ..

நிங்களும் கலந்து கொள்ளுங்கள் … M : 09321454425 / 9987457276

——————————————————-

மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க நாள் சனவரி 29 வீரவணக்கம் செலுத்த கொளத்தூர் நோக்கி இரு சக்கர ஊர்திப் பயணம்.

நாள்: ஞாயிற்றுக்கிழமை 29 சனவரி 2012,
காலை 7.30 மணி. பயணம் புறப்படும்
இடம்: முத்து இரங்கன் சாலை, தியாகராயர் நகர்.
சேருமிடம்: கொளத்தூர்.

விரவணக்கம் செலுத்த பயணத்தில் இணைந்து கொள்ள தோழர்களை அழைக்கிறோம்.

Save Tamils Movemnt

Leave a Comment

Leave a comment